எங்களை பற்றி

நகராட்சி  நிர்வாக இயக்குநரகம்

நகராட்சி நிர்வாக இயக்குரகம், மாநிலத்தில்உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் மற்றும் மேற்பார்வையிடும் துறைத்தலைமையாக செயல்படுகிறது.  நகராட்சிநிர்வாக இயக்குரகம், நகராட்சி நிர்வாக அவர்களை தலைவராகவும் மற்றும்  இணை ஆணையர்கள், கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் ஏழு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களை (மண்டலத்திற்கு ஒருவர் என செங்கல்பட்டு, வேலுhர், சேலம், திருப்பூர், தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலங்கள்) கொண்டுள்ளது.

2011 ஆம்ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநகராட்சிகளின் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) மக்கள்தொகை 80,65,843ஆகும். இது மாநிலத்தின் மொத்தமக்கள்தொகையில் 11.18 சதவீதமாகவும், மொத்த நகர்ப்புர மக்கள் தொகையில் 23.08 சதவீதமாகவும் மற்றும் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 1.10 சதவீதமாகவும் உள்ளது. மாநகராட்சிகள் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) மொத்தம் 1,278.34 சதுரகி.மீ.பரப்பளவில்அமைந்துள்ளன. இது மாநிலத்தின் மொத்தநகர்ப்புர நிலப்பரப்பில் 9.38 சதவீதமாகும்

2011ஆம் ஆண்டுமக்கள் தொகை கணக்கெடுப்பின் படிநகராட்சிகளின் மக்கள்தொகை 90,18,646 ஆகும்.இது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 12.50 சதவீதமாகவும், மொத்த நகர்ப்புரமக்கள்தொகையில் 25.80 சதவீதமாகவும் மற்றும் வருடாந்திரவளர்ச்சி விகிதம் 1.02 சதவீதமாகவும் உள்ளது.  நகராட்சிகள் மொத்தம் 2560.12 சதுரகி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளன. இது மாநிலத்தின் மொத்தநகர்ப்புரநிலப்பரப்பில் 18.78  சதவீதமாகும்.

தமிழ்நாட்டில் 20  மாநகராட்சிகள் (சென்னைநீங்கலாக) மதுரை, கோயம்புத்துhர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல்,  தஞ்சாவூர்,ஆவடி, நாகர்கோவில், ஓசூர்,காஞ்சிபுரம்,கரூர்,கும்பகோணம்,தாம்பரம்,சிவகாசி,கடலூர்   மற்றும் 138 நகராட்சிகள், நகராட்சிநிர்வாக இயக்குநரின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவருகின்றன.  மாநிலத்தில்உள்ளநகராட்சிகள்ஆண்டுவருமானத்தின்அடிப்படையில் கீழ்கண்டவாறுதரம்பிரிக்கப்பட்டுள்ளது. 

. எண். தரம் ஆண்டுவருமானம்     (கோடியில்) நகராட்சிகளின்எண்ணிக்கை
1 சிறப்புநிலை 10.00 க்குமேல் 8
2 தேர்வுநிலை 6.00-10.00 28
3 முதல்நிலை 4.00-6.00 34
4 இரண்டாம்நிலை 4.00 க்குகீழ் 68
மொத்தம்   138

நகராட்சி நிர்வாகத்துறை வரலாறு

தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத்துக்கென்று ஒரு நீண்டநெடிய வரலாறு உண்டு. தென்னிந்தியாவில் கோலோச்சிய சோழர்களால் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த அமைப்பான ‘குடவோலை’ முறை, நன்கு வடிவமைப்பட்ட, பிரதிநிதித்துவ அமைப்பு. இந்தஅமைப்பே,  தற்போதுள்ள மக்களாட்சி அமைப்புகளுக்கு அடிப்படையாகும்.

நகராட்சி நிர்வாகத்துறை வரலாற்றில் பின்வரும் சிறப்பு அம்சங்கள் உள்ளன:

 

alt+k

அரசியலமைப்பு திருத்தம்:

1992ஆம்ஆண்டு இந்திய அரசியலமைப்பில் நகராட்சி உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாக ஒருபுதிய பிரிவு கீழ்கண்ட காரணங்களுக்காக சேர்க்கப்பட்டது.

  • மூன்று வகையான நகராட்சிஅரசியலமைப்புகள்:
    • அ. கிராமங்களிலுருந்து நகர்ப்புறங்களாக மாறிக்கொண்டிருக்கும் பகுதிகளுக்காக நகர்பஞ்சாயத்து (டவுன்பஞ்சாயத்து)
    • ஆ. சிறிய நகர்ப்புற பகுதிகளுக்காக நகரசபை
    • இ. பெரிய நகர்ப்புற பகுதிகளுக்காக மாநகராட்சி
  • நகரசபைகளின் அமைப்பு
    • அ.நகராட்சிகளின்வார்ட் அல்லது மற்ற மட்டங்களில் குழுவின்தலைவர் பிரதிநிதித்துவம் ஏதாவது இருந்தால்,

                   ஆ. குறிப்பிட்ட நகரசபை பகுதியடங்கிய தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற                                                  உறுப்பினர் / பாராளுமன்ற உறுப்பினரின் பிரதிநிதித்துவம்

  • மாநில சட்டம்குறிப்பிட்டுள்ள முறைபடி நகராட்சி தலைவர்தேர்வு
  • மாநிலசட்டம் வழங்கியபடி நகராட்சிகளின் வார்டு அல்லது மற்ற மட்டங்களில் குழுக்கள் அமைப்பு
  • நகரசபைகளின் உறுப்பினர் மற்றும் தலைவர்ஆகிய இருபதவிகளிலும் இடஒதுக்கீடு 
      • அ. தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு
      • ஆ. பெண்களுக்கான இடஒதுக்கீடு
      • இ. பிற்பட்டமக்களுக்களின் நலனுக்காக இட ஒதுக்கீட
  • ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான பதவி
  • நகராட்சிகள் நிர்ணயிக்கும் வரிதீர்வை மற்றும் கடன்கள், வரிதீர்வை மற்றும் கடன்கள் மூலம் கிடைத்தவருமானத்தை நகரசபைகளுக்கு மாநிலஅரசுமூலம் அளித்தல் மற்றும் மானியம் வழங்குதல்
  • நகராட்சிகளின் நிதிவசதியை ஆய்வு செய்ய மாநிலநிதி; ஆணையம் அமைப்பு
  • கணக்கு தணிக்கை
  • அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்திட மாநில தேர்தல் ஆணையம் அமைப்பு

அரசியலமைப்பு திருத்தங்கள்

ஒரு தனிபகுதியை சேர்த்து அரசியலமைப்பை திருத்தும் திட்டத்தின் மூலம் அரசியலமைப்பு சட்டம் 1992 (74வதுதிருத்தம்) நிறைவேறி முடிந்தது. நகர்ப் புற   உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான திருத்தங்கள் அரசியலமைப்பு சட்டம் பகுதி IX-A ​ஆக இணைக்கப்பட்டுள்ளது.  இது 243 பி(243 p) முதல் 243 இசட்ஜி (243 zg) வரை 17 விதிகள்கொண்டது. விதி 243-டபில்யு(243-w)வின்படி, அரசியலமைப்பு சட்டம் 1992 (74வது திருத்தம்) நகராட்சிகளுக்கு 12வது அட்டவணையின் படி கீழ்கண்டவாறு பட்டியப்பட்டுள்ள விஷயங்கள் தொடர்பாக, அதிகாரம் மற்றும் பொறுப்பு அளிக்கிறது. அவை

12வது அட்டவணை

விதி 243-டபில்யு(Article 243-w)

  1. சிறு நகரதிட்டமிடல் உட்பட நகர்ப்புற திட்டமிடல்
  2. நிலபயன் பாடுமற்றும் கட்டிட நிர்மான கட்டுப்பாடு
  3. பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான திட்டமிடல்
  4. சாலைகள் மற்று ம்பாலங்கள்
  5. வீடு, தொழில்மற்றும் வணிகபயன்பாட்டிற்கான நீர்வழங்குதல்
  6. பொதுநலன், சுகாதாரபாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை
  7. தீயணைப்புத்துறை
  8. நகர்புறவனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சூழலியல்அம்சங்கள் தொடர்பான மேன்மை
  9. மாற்றுத்திறனாளிகள் உள்ளடங்கிய சமூகத்தின் நலிந்த பிரிவினரின் நலன் பாதுகாப்பு
  10. குடிசைப்பகுதிகள்முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி
  11. நகர்புற ஏழ்மை ஒழித்தல்
  12. பூங்காக்கள் தோட்டங்கள் விளையாட்டு மைதானங்கள் போன்ற நகர்ப்​​புற வசதிகள் உருவாக்குதல்
  13. கலாச்சாரம், கல்விமற்றும் அழகுணர்ச்சி அம்சங்கள் மேன்மை
  14. புதைத்தல் மற்றும்இடுகாடுகள்; தகனம், சுடுகாடு மற்றும் மின்சார சுடுகாடு
  15. கால்நடைப்பட்டி மற்றும் மிருகவதைதடுப்பு
  16. பி​றப்பு மற்றும் இறப்புபதிவு உள்ளிட்ட முக்கியபுள்ளி விவரங்கள்
  17. தெருவிளக்கு, ​ வாகன நிறுத்தம் பேருந்து நிறுத்த வசதி மற்றும் பொதுமக்கள் பயன்பாடு உள்ளடங்கிய பொதுவசதிகள்
  18. இறைச்சிக்கூடம் மற்றும் தோல்பதனிடும் இடங்கள் முறைப்படுத்துதல்