திருகோவிலூர் நகராட்சி
திருக்கோவிலூர் பேரூராட்சியானது கள்ளக்குறிச்சி நகரத்திற்கு 37 கி.மீ தூரத்தில் கிழக்கேயும்,விழுப்புரம் நகரத்திற்கு 40 கி.மீ தூரத்தில் தென் மேற்கேயும் அமைந்த தேர்வுநிலை பேரூராட்சியாகும். திருக்கோவிலூர் வருவாய் கோட்டமாக செயல்பட்டு வருகிறது. திருக்கோவிலூர் பஞ்சாயத்தாக அரசு ஆணை எண். 86 நாள்.23.03.1886-ன்படி அங்கீகரிக்கப்பட்டது. அரசின் நி. மு .எண். 48841 / 51 நாள் . 24. 04. 1952-ன்படி முதல் நிலைபேரூராட்சியாகவும், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் சென்னை அவர்களது உத்திரவு நி.மு .எண் 86/ 66 நாள் . 23.03.1966-ன்படி தேர்வு நிலை பேரூராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. ஊரக வளர்ச்சித் துறை அரசு ஆணை எண் 150 நாள்.01.10.2004-ன்படி சிறப்பு சிற்றூராட்சியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு பின்னர் அரசு ஆணை எண்.556 நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் ( தேர்தல் ) துறை நாள்.14.07.2007-ன்படி மீண்டும் தேர்வு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது.
தற்பொழுது அரசானை எண் 67, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 11.09.2021 தேதியிட்ட ஆணையின் படி திருகோவிலூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பபட்டது
முகவரி
நகராட்சி அலுவலகம்
செவலை ரோடு
திருக்கோவிலூர்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
தொலை பேசி எண் : 9159696219
மின்னஞ்சல் : commr.tirukovilur@tn.gov.in
நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]
விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு
நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 நகரமன்றத் தலைவருக்கான இட ஒதுக்கீடு விவரம்
மேலும் தகவலுக்கு : WHO & MoHFW
செல்வி. பா. திவ்யா பி.எஸ்சி.,
ஆணையாளர்,
நகராட்சி அலுவலகம்,
செவலை ரோடு,
திருகோவிலூர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்.
தொலை பேசி : 9159696219
E-Mail : commr.tirukovilur@tn.gov.in

மின்னணு சேவை
https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

நகராட்சி ஒரு பார்வை
பொது
மாவட்டம் : கள்ளகுறிச்சி
மண்டலம் : வேலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு
மொத்தம் : 11.99 ச. கி.மீ.
மக்கள் தொகை
மொத்தம் : 30212
ஆண்கள் : 15051
பெண்கள் : 15161

குடிமக்களுக்காக

விரைவான தொடர்புக்கு
