பொன்னனியாறு அணை
கரூர் மாவட்டத்தில் கடவூர் மலைப்பகுதியில் உள்ள பூஞ்சோலை கிராமத்தின் அருகில் அமைந்துள்ள பொன்னணியார் அணைக்கட்டு சுற்றுலா தலமாகும். இந்த அணை செம்மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் சேமித்து வைக்கப்படும் நீர் அங்குள்ள பாசன நிலங்களின் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த அணைப் பகுதி பொதுப்பணித்துறையால் பாதுகாக்கப்படுகிறது.
அருள்மிகு சதாசிவப் பிரம்மேந்திராள் அதிஷ்டானம், நெரூர்
கரூர் மாவட்டத்தில், கரூர் – திருமுக்கூடலூர் சாலையில் 13-வது கிலோ மீட்டர் தொலைவில் நெரூர் கிராமத்தில் ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் ஜீவ சமாதியும், அதற்கு முன்புறம் அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயிலும் அமைந்துள்ளது. இந்த ஜீவ சமாதி காவிரிக் கரையில் ஒரு சோலையில் அமைந்துள்ளது. காவிரியாறு இவ்விடத்தில் தெற்கு நோக்கி ஓடுவது மிகச் சிறப்பான அம்சமாகும். தமிழகத்திலிருந்து மட்டுமன்றி பிற மாநிலத்தவரும் வருகை தரும் ஒரு அற்புத தலமாகும்.