காண வேண்டிய இடங்கள்

காண வேண்டிய இடங்கள்

ஓசூரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பார்ப்பதற்கு ஆர்வமான இடங்கள்

இடத்தின் பெயர் பார்க்கவேண்டிய இடங்கள் தூரம் வழி
சந்திரசூடேஸ்வரர் கோயில் கோயில் மற்றும் பசுமையான பின்னணி 1 கி.மீ ஒசூர் நகரம்
பெருமாள் கோயில் கோயில் 1 கி.மீ ஒசூர் நகரம்
பிரம்ம மலை கோயில் கோயில் 1 கி.மீ ஒசூர் நகரம்
தொரப்பள்ளி இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரி பிறந்த இடம் 11 கி.மீ இராயக்கோட்டை நோக்கி செல்லும் வழி
மத்திகிரி கால்நடை பண்ணை 6 கி.மீ தேன்கனிக்கோட்டை நோக்கி செல்லும் வழி
கெலவரபள்ளி அணை நீர்த்தேக்கம் மற்றும் பூங்கா 10 கி.மீ ஆவலபள்ளி வழியாக
உத்தனபள்ளி முருகன் கோயில் 17 கி.மீ இராயக்கோட்டை நோக்கி செல்லும் வழி
தளி ஏரி காட்சி (குட்டி இங்கிலாந்து) 27 கி.மீ ஓசூரிலிருந்து தளிக்கு செல்லும் வழி
தேன்கனிக்கோட்டை பெட்டராயசாமி கோயில் 25 கி.மீ ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் வழி
இராயக்கோட்டை மலைக்கோட்டை 30 கி.மீ ஓசூரிலிருந்து இராயக்கோட்டை செல்லும் வழி

 

வரலாற்று தருணங்கள்

ஓசூரானது 1290-ம் ஆண்டு இராமனாத மன்னரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஹோசியாலா வம்சத்தைச் சார்ந்தவர். ஹோசியாலா வம்சத்தின் ஆட்சியானது மாரவர்மன் சுந்தரபாண்டியனுடனான யுத்தத்தில் 3-ம் பல்லவராயா இறந்தபின் முடிவுக்கு வந்தது.

மலை உச்சியில் அமைந்துள்ள சந்திரசூடேஸ்வரர் கோயிலானது, ஹோசியலா வம்ச ஆட்சியில் மன்னர் திருப்புவனமல்ல பர்வதிராஜ அந்தியாழ்வாரால் கி.பி.1260-ம் ஆண்டு கட்டப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சேலம் கலெக்டர்/ஆட்சியர் வல்டோன் இல்லியார்ட் லோக்கர்ட், ஓசூரை சேலம் மாவட்டத்தின் தலைமயகமாக மாற்றினார்.  1980-களில் சிப்காட் உதவியுடன் தொழிற்சாலைகள் மயமாக்கல் தொடங்கியதுடன் ஓசூர் தொழிற்சாலை நகரமானது.  அதன்பிறகு அடிப்படை வளர்ச்சிகள் நடைபெறதத்தொடங்கின.