தருமபுரி நகராட்சி முதலில் பேரூராட்சியாக இருந்து 14.02.1964 ம் தேதிய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அரசு ஆணை எண் 360 ன் படி 01.04.1964 முதல் மூன்றாம் நிலை நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டது. பிறகு 05.08.1971 ம் தேதி முதல் இராண்டாம் நிலை நகராட்சியாக 14.06.1971 ம் தேதிய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அரசு ஆணை எண் 1401 ன் தரம் உயர்த்தப்பட்டது. மேலும் 31.08.1987 ம் தேதிய எண் 651 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை அரசு உத்திரவில் இநநகராட்சி முதல் நிலை நகராட்சியாக 12.10.1987 முதல் தரம் உயர்த்தி உத்திரவிடப்பட்டு முதல் நிலை நகராட்சியாகவும் அரசு ஆணை(நிலை) எண் 238 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை நாள் 02.12.2008 ன் படி தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தட்டு 02.12.2008 முதல் தேர்வு நிலை நகராட்சியாகவும் செயல்பட்டுவந்தது. அரசு ஆணை எண் 50 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை நாள் 06.03.2019 ன் படி 06.03.2019 முதல் சிறப்பு நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது
முகவரி
நகராட்சி அலுவலகம்
கந்தசாமி வாத்தியார் தெரு
தருமபுரி-636701.
தொலை பேசி எண் : 04342-260910
இ-மெயில் : commr.dharmapuri@tn.gov.in
நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]
விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு
நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 04342 260910
நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்
மேலும் தகவலுக்கு : WHO & MoHFW
தொடர்பு முகவரி
திரு.எஸ்.புவனேஸ்வரன் (எ) அண்ணாமலை
நகராட்சி ஆணையாளர்
நகராட்சி அலுவலகம்
கந்தசாமி வாத்தியார் தெரு
தருமபுரி. 636701
தொலை பேசி :04342-260910,260387,7397396253
இ-மெயில் : commr.dharmapuri@tn.gov.in
மின்னனு சேவை
https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
நகராட்சி ஒரு பார்வை
- பொது
மாவட்டம் : தருமபுரி
மண்டலம் : சேலம் மண்டலம்
மாநிலம் : தமிழ்நாடு - பரப்பளவு
மொத்தம் : 11.64 ச.கி.மீ - மக்கள் தொகை
மொத்தம் : 68619
ஆண் : 34091
பெண் : 34528
விரைவான இணைப்பு
Read More…